1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
A. புதுமை
B. பழமை
C. பெருமை
D. சீர்மை
2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
.A. இடன் + புறம்
B. இடது + புறம்
C. இட + புறம்
D. இடப் + புறம்
3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
A. சீர் + இளமை
B. சீர்மை + இளமை
C. சீரி + இளமை
D. சீற் + இளமை
4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
A. சிலம்பதிகாரம்
B. சிலம்புதிகாரம்
C. சிலப்பதிகாரம்
D. சில பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..
A. கணினிதமிழ் B. கனினிதமிழ்
C. கணிணிதமிழ். D. கணினித்தமிழ்
6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்………….
A. கண்ண தாசன். B. வாணிதாசன்
C. பாரதிதாசன் D. பாரதியார்
7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ………..
A. மாடம் B. வானம் C. விலங்கு
D. அம்மா
8. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ……………
A. மொழி B. தொல்காப்பியம்
C. பொருள் D. அம்மா
9. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ……………
A. கணினித்தமிழ். B. திருக்குறள்
C. சிலப்பதிகாரம் D. தொல்காப்பியம்
10. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
A. எண்களின். B. மொழி
C. பொருள். D. விலங்கு
Post a Comment