தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்(7standard)

1. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது???? 
 A. 1974    B. 1998    C. 1984   D. 1964 

 2. தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சியில் தவறானதை கண்டுபிடிக்க???
 A. பல்லவர் காலம்- கி. பி600-850
 B. முற்காலச்சோழர்கள் காலம்-கி.பி850-1100 
 C. பிற்காலச் சோழர் காலம்- கி. பி1100-1450
 D. நவீன காலம்- கி. பி1600 பின்னர்

 3. ........... காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் மாற்றத்திற்கு உள்ளானது????
 A. பாண்டியர்கள்
 B. பல்லவர்கள்
 C. சோழர்கள் 
 D. நாயக்கர்கள் 

 4. குடைவரைக் கட்டட கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்????
 A. முதலாம் மகேந்திரவர்மன் 
 B. முதலாம் இராஜராஜ சோழன்
 C. விஜயலாய சோழன் 
 D. இரண்டாம் நரசிம்மவர்மன்

 5. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் உள்ளது எது????? 
 A. காஞ்சி கைலாசநாதர் கோவில்
 B. ஜலகண்டேஸ்வரர் கோவில்
 C. ராமேஸ்வரம் ராமசுவாமி நாதர் கோவில் 
 D. அழகர் கோவில் 

 6. விஜய நகர காலம் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது????
 A. விஜய நகர அரசர்களின் காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடம் கட்டும் முறை உருவானது.
 B. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாண மண்டபம் எடுத்துக 
 C. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புது மண்டபாகும்
 D. எதுவுமில்லை 

 7. பிற்கால பாண்டியர்கள்........... நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் பட்டியலிலுள்ள (காரைக்குடி) குடைவரைக் கோவிலாகும்??? 
 A. 12 B. 13 C. 14 D. 15

 8. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்????
 A. 2 ம்நரசிம்மவர்மன் 
 B. ராஜசிம்மன்
 C. AB இரண்டும் சரி 
 D. 2 ம் நந்தி வர்மன் 

 9. குடை வரை கோவில்கள் அமைக்கும் முறை கிபி....... க்குப் பின்னர் பெரிய வடிவிலான கட்டுமான கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது?????
 A. 900    B. 700    C. 600    D. 800 
 
 10. ஏழு கோவில்கள் என அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்கள் யாரால் எழுதப்பட்டது???? 
 A. இரண்டாம் நரசிம்மவர்மன்
 B. இரண்டாம் நந்தி வர்மன் 
 C. முதலாம் மகேந்திரவர்மன்
 D. முதலாம் நரசிம்மவர்மன்

 11. தமிழ் திராவிட கோவில் கட்டடக்கலை மரபிற்கான எடுத்துக்காட்டு(மகாபலி புரம்-பஞ்ச பாண்டவ ரதங்கள்) ????? 
 A. திரௌபதி இரதம், அர்ச்சுன இரதம் 
 B. தர்மராஜா இரதம், நகுல சகாதேவ இரதம்
 C. பீம இரதம் 
 D. அனைத்தும் 

 12. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும்.......... கட்டிடக்கலைப் பாணியை பறைசாற்றும்???? 
 A. சோழர்
 B. பல்லவர் 
 C. பாண்டியர்
 D. நாயக்கர் 

 13. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் தற்போது......... உள்ள திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் உள்ளது??? 
 A. மதுரை     B. திருநெல்வேலி 
 C. திருப்பரங்குன்றம்    D. காரைக்குடி 

 14. பாண்டியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில்....... மேற்பட்ட குகைக் கோவில்கள் கண்டறியப்பட்டன???? 
 A. 100    B. 70    C. 50.     D. 40

 15. முற்காலச் சோழர் கட்டக் கலையின் சிறப்பம்சம் எது???
 A. கோபுரம்.    B. விமானம் 
 C. புடைப்புச் சிற்பம்    D. பிரகாரம்

 16. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது????
 A. இரண்டாம் நந்தி வர்மன் 
 B. இரண்டாம் நரசிம்மவர்மன் 
 C. விஜயலாய சோழன்
 D. முதலாம் நரசிம்மவர்மன்

 17. விஜய நகர கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் என்ன???? 
 A. விமானம்.   B. கோபுரம்.    C. மண்டபம்
 D. பிரகாரம் 

 18. பிற்காலச் சோழர்கள் காலம்......... பெயர் பெற்றது???? 
 A. கோபுரம்   B. விமானம் 
 C. பிரகாரம்    D. மண்டபம் 

 19. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது????
 A. மதுரை    B. திருக்குறுங்குடி 
 C. திருநெல்வேலி    D. ஸ்ரீ வில்லிபுத்தூர்

 20. முற்காலப் பாண்டியர்கள் யாரின் சமகாலத்தவர் ஆவார்???
 A. பல்லவர்    B. முற்கால சோழர் 
 C. பிற்காலச் சோழர் 
 D. பிற்கால பாண்டியர் 

 21. விஜயநகர காலத்தில் கோவில்களில் கட்டப்பட்ட கல்யாண மண்டலங்களுக்கு எடுத்துக்காட்டு????
 A. வேலூர்-ஜலகண்டேஸ்வரர் கோவில்
 B. காஞ்சிபுரம்-வரதராஜ பெருமாள் கோவில் 
 C. மதுரை கோவிலுள்ள புதுமண்டபம்
 D. அனைத்தும்

 22. தஞ்சை பெரிய கோவில் பற்றி தவறானவை???? 
 A. தஞ்சை பெரிய கோவிலின் விமானம் 216 அடிகளாகும்
 B. மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப் படுகிறது 
 C. இங்குள்ள 16அடிஸநீளமும் 13 அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப் பட்டதா 
 D. எதுவுமில்லை 

 23. யாரின் கட்டக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றின????
 A. பிற்காலச் சோழர் 
 B. முற்காலச் சோழர் 
 C. பல்லவர்     D. நாயக்கர்

 24. செம்பியன் மகா தேவி பாணியில் அமைந்த குடைவரைக் கோவிலுக்கு உதாரணம் என்ன????
 A. திருப் புறம்பியத்திலுள்ள கோவில்
 B. நெல்லையப்பர் கோவில்
 C. காஞ்சி கைலாசநாதர் கோவில் 
 D. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் 

 25. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை எது??? 
 A. இரவி மண்டபம்-திருகுறுங்குடி
 B. ஆதி நாதர்கோவில்-ஆழ்வார் திருநகரி C. ஐராவதீஸ்வரர் கோவில்-தாராசுரம்
 D. அனைத்து 

 26. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. இராமேஸ்வரம் கோவிலின் சிறப்பு மிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதில் அமைந்துள்ளது
B. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் இவையே.
 C. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் 8மீட்டர் உயரம் கொண்டது.
 D. வெளிப்பிரகாரத்தில் தாங்கி நிற்கும் 1200 க்கும் மேற்பட்ட தூண்கள் தனிச்சிறப்பாகும். 

 27. சோழர்களின் கட்டடக்கலைக்கு தமிழ்நாட்டில் திண்டிவனத்திற்கு அருகேயுள்ள............ கோவிலை கூறலாம்????
 A. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் B. தாதாபுரத்திலுள்ள கோவில்
 C. மீனாட்சி அம்மன் கோவில்
 D. காஞ்சி கைலாசநாதர் கோவில்

 28. முற்கால பாண்டியர்களின் ஓவியம் உள்ள இடங்கள் எது?????
 A. சித்தன்னவாசல்-புதுக்கோட்டை
 B. திருநெல்வேலி-திருமலைபுரம்
 C. A மட்டும்    D. இரண்டுமே

 29. மத்த விலாசப் பிரகடனம் என்னும் நூலை எழுதியவர் யார்????? 
 A. முதலாம் நரசிம்மவர்மன்
 B. முதலாம் மகேந்திரவர்மன்
 C. விஜயலாயன் 
 D. முதலாம் இராஜராஜ சோழன்

 30. கங்கை கொண்ட சோழப் புரம்........ ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது????? 
 A. 250     B. 150     C. 350     D. 450

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post